Categories: தமிழகம்

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி தகராறு…ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்த தொண்டர்கள்: கண்டன ஆர்ப்பாட்டம் சலசலப்பு..!!

திருச்சி: காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கோஷ்டி தகராறால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 8 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.50 விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தால் அதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூர் குறுக்கு தெரு பகுதியில் இன்று காலை காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் கியாஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை போட்டு,
அருகில் விறகு அடுப்பு பற்றவைத்து கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசு உடனடியாக கியாஸ் விலையை குறைக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் சுஜாதா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், வில்ஸ்.முத்துக்குமார், முரளி உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் ஜவகர் கோஷ்டியினருக்கும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சரவணன் கோஷ்டியினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்ட தலைவர் ஜவகர் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என எப்படி தெரிவிக்கலாம் என வழக்கறிஞர் சரவணன் கோஷ்டியினர் ஒருவர் தாக்க முற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். இதன்
காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

3 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

5 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

5 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

6 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

7 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

7 hours ago

This website uses cookies.