Categories: தமிழகம்

G.O.A.T படத்துக்காக பேனர் வைப்பதில் தகராறு.. விஜய் ரசிகருக்கு கத்திக்குத்து.. குடியாத்தித்தில் பதற்றம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக ஒன்றிய பொறுப்பாளராக செல்வம் என்கின்ற கலைச்செல்வன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினராக CM செல்வம் இருவரும் செயல்பட்டு வருகின்றனர்.

இரு தரப்பினருக்கு இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் விஜய்யின் GOAT என்ற திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில், அந்தப் படத்திற்காக கடந்த 10 ஆம் தேதி CM செல்வம் தரப்பை சேர்ந்த ரியாஸ் மற்றும் அமீன் இருவரும் பேனர் ஒன்றை போட்டுள்ளனர்.

இந்த பேனரில் விஜய் மக்கள் ஒன்றியம் சார்பாக என்று வார்த்தை வந்துள்ளது. இது சம்பந்தமாக ரியாஸ் மற்றும் அமீன் ஆகிய இருவரிடம் செல்வம் என்கின்ற கலைச்செல்வன் மற்றும் அவர் தரப்பினர் வந்து கேட்டுள்ளனர்.

இதற்கு CM செல்வம் மற்றும் செல்வம் என்கின்ற கலைச்செல்வன் ஆகிய இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் போது செல்வம் என்கின்ற கலைச்செல்வன் மகன்கள் அஜய் மற்றும் சஞ்சய் மற்றும் கலைச்செல்வனின் தம்பி வீரமணி மற்றும் மச்சான் சிவா ஆகியோர் CM செல்வம் தரப்பினரிடம் வாக்குவாதமும் கைகளப்பும் ஏற்பட்டுள்ளது

அப்போது கலைச்செல்வனின் மகன்கள் அஜய் மற்றும் சஞ்சய் இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து CM செல்வம் என்பவரை தாக்க முயன்ற போது
அருகே இருந்த CM செல்வத்தின் சித்தப்பா மகனான விஜய் (வயது 24) தடுக்க முயன்ற போது அவருக்கு கை மற்றும் தலையில் கத்தியால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் காயம் ஏற்பட்ட விஜயின் தந்தை தண்டபாணி குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் அடிப்படையில் குடியாத்தம் போலீசார் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து

01.செல்வம் என்கின்ற கலைச்செல்வன்

  1. அஜய் மற்றும. 03.சஞ்சய் (மகன்கள்)
  2. விவின் வயது 17 (தம்பி மகன்)

ஆகிய நான்கு பேரை கைது செய்து

தப்பி ஓடிய

  1. வீரமணி (தம்பி)
  2. சிவா (மச்சான்) இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

விஜய்யின் படம் வெளிவர இருக்கும் நிலையில் அதற்கான பேனர் போடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்தி வெட்டு மற்றும் தந்தை மகன்கள் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.