Categories: தமிழகம்

G.O.A.T படத்துக்காக பேனர் வைப்பதில் தகராறு.. விஜய் ரசிகருக்கு கத்திக்குத்து.. குடியாத்தித்தில் பதற்றம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக ஒன்றிய பொறுப்பாளராக செல்வம் என்கின்ற கலைச்செல்வன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினராக CM செல்வம் இருவரும் செயல்பட்டு வருகின்றனர்.

இரு தரப்பினருக்கு இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் விஜய்யின் GOAT என்ற திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில், அந்தப் படத்திற்காக கடந்த 10 ஆம் தேதி CM செல்வம் தரப்பை சேர்ந்த ரியாஸ் மற்றும் அமீன் இருவரும் பேனர் ஒன்றை போட்டுள்ளனர்.

இந்த பேனரில் விஜய் மக்கள் ஒன்றியம் சார்பாக என்று வார்த்தை வந்துள்ளது. இது சம்பந்தமாக ரியாஸ் மற்றும் அமீன் ஆகிய இருவரிடம் செல்வம் என்கின்ற கலைச்செல்வன் மற்றும் அவர் தரப்பினர் வந்து கேட்டுள்ளனர்.

இதற்கு CM செல்வம் மற்றும் செல்வம் என்கின்ற கலைச்செல்வன் ஆகிய இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் போது செல்வம் என்கின்ற கலைச்செல்வன் மகன்கள் அஜய் மற்றும் சஞ்சய் மற்றும் கலைச்செல்வனின் தம்பி வீரமணி மற்றும் மச்சான் சிவா ஆகியோர் CM செல்வம் தரப்பினரிடம் வாக்குவாதமும் கைகளப்பும் ஏற்பட்டுள்ளது

அப்போது கலைச்செல்வனின் மகன்கள் அஜய் மற்றும் சஞ்சய் இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து CM செல்வம் என்பவரை தாக்க முயன்ற போது
அருகே இருந்த CM செல்வத்தின் சித்தப்பா மகனான விஜய் (வயது 24) தடுக்க முயன்ற போது அவருக்கு கை மற்றும் தலையில் கத்தியால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் காயம் ஏற்பட்ட விஜயின் தந்தை தண்டபாணி குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் அடிப்படையில் குடியாத்தம் போலீசார் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து

01.செல்வம் என்கின்ற கலைச்செல்வன்

  1. அஜய் மற்றும. 03.சஞ்சய் (மகன்கள்)
  2. விவின் வயது 17 (தம்பி மகன்)

ஆகிய நான்கு பேரை கைது செய்து

தப்பி ஓடிய

  1. வீரமணி (தம்பி)
  2. சிவா (மச்சான்) இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

விஜய்யின் படம் வெளிவர இருக்கும் நிலையில் அதற்கான பேனர் போடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்தி வெட்டு மற்றும் தந்தை மகன்கள் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.