5 ஆயிரம் பாதிப்புகளை கடந்தது ஈரோடு : மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்..!
17 September 2020, 6:30 pmசென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறி, இறங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,420ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 992 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 530 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், செங்கல்பட்டுவில் 283 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு விபரத்தை தற்போது காணலாம்..!