இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம் இதோ..!
4 August 2020, 7:02 pmசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 1,023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இதுவரையில் 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, விருதுநகரில் 424 பேருக்கும், திருவள்ளூரில் 358 பேருக்கும், தேனியில் 292 பேருக்கும், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம் :-