6 நாட்களுக்குப் பிறகு 1,000த்தை கடந்த சென்னை : மாவட்ட வாரியான பாதிப்பு விபரம்..!
14 August 2020, 6:36 pmசென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறி, இறங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரித்துள்ளது.
6 நாட்களுக்குப் பிறகு சென்னையில் பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 1,187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, திருவள்ளூரில் 495 பேருக்கும், செங்கல்பட்டில் 437 பேருக்கும், கோவையில் 385 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு விபரத்தை தற்போது காணலாம்..!