அதிமுக சறுக்கிய போதெல்லாம், தூக்கி நிறுத்திய சசிகலா தற்போது சீரழிந்து போவதை தன்னால் பார்க்க முடியவில்லை என கூறி திவாகரன் கண்ணீர் விட்டு அழுதார்.
தஞ்சையில் சசிகலா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைப்பு விழா சசிகலா மற்றும் திவாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சசிகலாவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது.
பின்பு மேடையில் திவாகரன் பேசியதாவது :- ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போது சசிகலாவை ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்தி அமைச்சராக்க நினைத்தார். ஆனால் சசிகலாவோ அதனை அன்புடன் மறுத்தார். அப்படி பட்டவரின் விசுவாசத்தை தற்போது அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் பலர் மறந்து விட்டனர். அவரால் பதவிகளை பிடித்தவர் ஏராளம்.
எங்கள் வீட்டு கதவை திறந்தவர்களுக்கு கூட பதவி கிடைத்துள்ளது. அவர்கள் எல்லாம் நன்றியை மறந்து விட்டார்கள். இதனால் சசிகலாவின் கரத்தை வலுப்படுத்த அண்ணா திராவிடர் கழகத்தை அ.தி.மு.க.வில் இணைத்துள்ளோம். அதிமுக சறுக்கிய போதெல்லாம் சசிகலாவும், நடராசனும் தூக்கி பிடித்தார்கள். ஆனால், தற்போது சசிகலா சீரழிந்து போவதை தன்னால் பார்க்க முடியவில்லை, என கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.