விவாகரத்தான தன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைதளங்களில் பதிவிட்டு டார்ச்சர் செய்வதாக பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஒரு பெண். இவருக்கும் பொள்ளாச்சி கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து ஆகியுள்ளது. விவாகரத்து ஆன நிலையில் முன்னாள் கணவர் அவரை அடிக்கடி நேரில் சென்று வாழவிடாமல் டார்ச்சர் செய்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் அந்த பெண் வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லும் இடத்தில் அவரை குறித்து தவறாக பேசியும், அவரது புகைப்படத்தை தவறான முறையில் ஆபாசமாக சித்தரித்து முன்னாள் கணவரும், கணவரது உறவினர்களும் வலைதளத்தில் பதிவிடுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மன விரக்தி அடைந்த அந்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது பணியில் இருந்த காவலர்கள் அவரை காப்பாற்றி, சமரசம் பேசி அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுக்க அறிவுறுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.