தமிழகம்

எங்கயோ கனெக்ட் ஆகுதே.. திமுக பக்கம் சாய்கிறதா தேமுதிக? அரசியலில் சுடச் சுட!

ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு கிடையாது என திட்டவட்டமாக அதிமுக தெரிவித்துள்ள நிலையில், திமுக பக்கம் பிரேமலதா செல்லவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: அதிமுக தங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் என்ற நம்பிக்​கையில் இருந்த பிரேமலதாவுக்கு, “நாங்கள் அப்படி எதுவும் ஒப்பந்தம் போடவில்​லையே..” என எடப்பாடி பழனிசாமி கூறியதும் திடுக்கென்றது என்பது தமிழக அரசியல் மேடையில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

எனவெ, தேமுதி​கவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை என திட்டவட்டமாகச் சொன்ன அதிமுக, அன்புமணியின் ராஜ்யசபா சீட்டுக்காக அணுகிய பாமகவுக்கு நல்ல பதிலைச் சொல்லி இருப்பதாகத் தெரிகிறது. இதனால், மக்களவைத் தேர்தலில் அதிமுகவை விட்டு​விட்டு பாஜக கூட்ட​ணிக்குப் போன பாமகவிடம் குணமாக பேசுவதையும் காண முடிகிறது.

இந்த அரசியல் கணக்கைப் புரிந்துகொண்ட திமுகவை மெல்ல திரும்பிப் பார்க்க ஆரம்பித்​திருக்​கிறார் பிரேமலதா விஜயகாந்த். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், பட்ஜெட் என அடுத்​தடுத்து திமுக ஆதரவு நிலைப்​பாட்டை எடுத்​துள்ள பிரேமலதாவுக்கு, பிறந்​தநாள் வாழ்த்துச் சொன்னார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

அதேநேரம், அதிமுக தரப்பில் பாஜக, பாமக, தவெக, நாதக என பல கட்சிகளிடமும் கூட்டணிப் பேச்சு​வார்த்​தைகள் நடப்ப​தாகச் சொல்லப்படுகிறது. எனவே, நாமும் கொஞ்சம் அரசியல் செய்தால்தான் நல்ல தொகுதிகளைப் பெறலாம் என்று நினைக்கிறார் பிரேமலதா.

இதையும் படிங்க: IPL கிங்குடா.!38 ரன் தான்..கோலி படைக்க இருக்கும் புது ரெகார்ட்.!

இதற்கேற்ப திமுகவும் தேமுதிக விஷயத்தில் கொஞ்சம் இறங்கிவந்​துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, வடக்கிலும், தென் மாவட்​டங்​களிலும் தேமுதி​கவுக்கு வாக்கு​வங்கி உள்ளது. எனவே, வட மாவட்​டங்​களில் பாமகவை​யும், தென் மாவட்​டங்​களில் பாஜகவையும் சமாளிக்க தேமுதிக உதவும் என திமுக கணக்கு போடுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மேலும், அதிமுக தர சம்மதிக்காத ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்க முன்வந்தால், பிரேமலதா கூட்டணி மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் முனுமுனுக்கப்படுகிறது. ஆனால், அடுத்த மார்ச் 18 அன்றே தேர்தல் கூட்டணி குறித்து கூறுவதாகவும் பிரேமலதா கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.