திருவள்ளூர் ; ஆரணி பேரூராட்சியில் 3 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் மன்ற கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வாயில் கருப்புத் துணி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் .
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் சுமார் 3 கோடி ரூபாய் வரை ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் பொன்னரசி நிலவழகன் 13வது வார்டு திமுக உறுப்பினர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் பொன்னரசி குறித்து அவதூறாக துண்டு பிரசுரங்களை ஓட்டியும் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்க மாத்திரைகளை உண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி மற்றும் செயல் அலுவலர் கலாதரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இதில், திமுக, அதிமுக வார்டு உறுப்பினர்கள் வாயில் கருப்பு கொடியை கட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக பெண் வார்டு உறுப்பினருக்கே திமுக ஆட்சியில் உரிய பாதுகாப்பு இல்லை என கூறி, அவதூறு பரப்பிய நபரை கைது செய்ய வேண்டும் என அதிமுக, திமுக, சுயேட்சை வார்டு உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணி கட்டி, தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.