இது பச்சை துரோகம்.. பேரூராட்சி தலைவர் பதவியை கூட்டணிக்கு ஒதுக்கிவிட்டு சுயேட்சையாக வென்ற திமுக : கம்யூ.,கட்சியினர் மீது தாக்குதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2022, 12:57 pm
Dmk Communist Fight - Updatenews360
Quick Share

கோவை : பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு  கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவி மார்க்ஸிஸ்ட் கம்யூ.,க்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுகவினர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்து தலைவராக அறிவித்துக்கொண்டனர்.

மேலும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பாலாமூர்த்தி மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே அடிதடி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 669

0

0