தமிழகம்

ஓரங்கட்டியவர்களை இழுக்கும் திமுக.. தவெக உட்கட்டமைப்பால் விறுவிறுப்பா?

மாநிலம் முழுவதும் தவெகவின் தாக்கத்தை உணர்ந்து திமுகவில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த நபரான திருநெல்வேலி அப்துல் வஹாப்பின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்​கப்​பட்ட நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்​பட்​டுள்ளது. அது மட்டுமல்லாமல், அதிமுகவில் இருந்து வந்த ஈரோடு தோப்பு வெங்க​டாசலம், விழுப்புரம் லட்சுமணன் ஆகியோரையும் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு​களில் இருந்து ஒதுக்​கிவைக்​கப்பட்ட செஞ்சி மஸ்தானையும் மாவட்டப் பொறுப்​பாளர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏனென்றால், இப்படி, கட்சிக்குள் அதிருப்​தி​யுடன் இருந்த மக்கள் செல்வாக்​குள்ள நபர்கள் எல்லாம் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய் பக்கம் திரும்பி​விடாமல் இருக்கவே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். முக்கியமாக, திமுகவிலிருந்து தவெகவுக்கு சிலர் போகலாம் என உளவுத் துறை தந்த தகவலின் அடிப்​படையில் இத்தகைய நடவடிக்கைகளை திமுக தலைமை வேகப்​படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதை அறவே மறுத்துள்ளார், திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான். இது தொடர்பாக பிரபல நாளிதழிடம் பேசியுள்ள அவர் “திமுகவில் மாவட்டப் பொறுப்​பாளர்கள் நியமனம் என்பது கட்சியைப் பலப்படுத்தும் மற்றும் தேர்தலுக்கான ஒரு யுக்தி.

தவெகவுக்கு பயந்துதான் தலைமை இப்படிச் செய்கிறது என்று சொல்வது பேதமை. மற்ற கட்சிகளில் இருந்து நீக்கப்​பட்​ட​வர்கள்தான் திமுகவுக்கு வருகின்றனரே தவிர, திமுக​விலிருந்து யாரும் எந்தக் கட்சிக்கும் போகவில்லை. அதுமட்டுமல்​லாமல், திமுகவிலிருந்து நீக்கப்​பட்​ட​வர்கள் கூட தவெக பக்கம் இதுவரை செல்ல​வில்லை.

இதையும் படிங்க: ஜிவி பேயை வைத்து திகில் காட்டினாரா..இல்லை கடுப்பேத்தினாரா..’கிங்ஸ்டன்’ பட விமர்சனம்!

இவ்வாறு இருக்கும் போது தவெகவின் பலம் என்ன? நிலைப்பாடு என்ன என்றே தெரியாத நிலையில் அவர்களைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் ​தி​முகவுக்கு கிடையாது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தவெக உடன் 2021 தேர்தலில் திமுகவுடன் வேலை பார்த்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இணைந்திருப்பதால் திமுகவுக்கு சற்று சலசலப்புடனே காணப்படுகின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.