விருதாசலத்தில் டீரில்லர் இயந்திரத்தைக் கொண்டு, சாலையை, சேதப்படுத்தி, திமுக கொடி கம்பிகளை, நட்டு வருவதை, நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
திமுகவின் இளைஞர் அணி மாநாட்டிற்காக அக்கட்சியின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த மோட்டார் சைக்கிள் பேரணி, இன்று விருதாச்சலம் பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை திமுக அமைச்சர் சி.வெ கணேசன் தொடங்கி வைத்து, விருத்தாசலம் நகரம் முழுவதும் திமுகவினர் பேரணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக விருத்தாச்சலம் நகரத்துக்கு உட்பட்ட கடைத்தெரு, ஜங்ஷன் ரோடு, பேருந்து நிலையம் என சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு, புதிதாக போடப்பட்ட சாலையின், ஓரம் அமைக்கப்பட்டுள்ள, பவர் பிளாக்கில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் எடுத்து, ட்ரில்லர் இயந்திரத்தைக் கொண்டு, சாலையை சேதப்படுத்தி, திமுக கொடி கம்பத்தை நட்டு வருவதை கண்டு, பொதுமக்கள் கடும் கொந்தளிப்படைந்தனர்.
ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்து வரும் நிலையில், திமுகவினர் கொடி கம்பம் நடுவதற்காக, புதிதாக போடப்பட்ட சாலையை இயந்திரத்தை, கொண்டு சேதப்படுத்தி வருவதை, மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.