வேலூர் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மாநகர மகளிர் அணி அமைப்பாளராக உள்ள 31- வது வார்டில் வெற்றி பெற்ற சுஜாதா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 45 வார்டுகளில் வெற்றி பெற்றது. சுயேச்சையாக வெற்றி பெற்ற 6 பேரில் 6-வது வார்டு உறுப்பினர் சீனிவாசன் திமுகவில் இணைந்தார்.
இதனையடுத்து திமுக கூட்டணி 46 வார்டாக அதிகரித்தது. மீதமுள்ள வார்டுகளில் அதிமுக 7 ; சுயேச்சை 5 வெற்றி பெற்றுள்ளனர். 8- ஆவது வார்டில் போட்டியின்றி தேர்வான காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் சுனில்குமார் துணை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது.
மொத்தம் 46 வார்டுகளில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையோடு உள்ளதால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உள்ளதால் வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 48 உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில். அதிமுக, சுயேச்சை உள்ளிட்ட 11 பேர் கலந்துகொள்ளவில்லை.
31 வது வார்டில் போட்டியிட்டு 3083 வாக்குகள் பெற்று 1366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் MA.Bed படித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருப்பவர் தற்போது மாநகர மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.