நாங்கள் ஆளுங்கட்சி எங்களை மீறி அதிகாரிகள் செயல்பட முடியுமா…? என்று மதுரை வாடிப்பட்டியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
மதுரை வாடிப்பட்டியில் தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் மூன்றாவது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதில் வாடிப்பட்டியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
மேலும் படிக்க: மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு… CM என்பதால் சலுகை அளிக்க முடியாது ; டெல்லி உயர்நீதிமன்றம்
வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி பகுதியில் அவர் பேசியதாவது :- எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரு குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் ஐந்து ஆண்டுகளில் கிடைக்கும். மாநில அரசு 3 லட்ச ரூபாயும், மத்திய அரசு மூலம் 5 லட்சம் ரூபாயும், மொத்தம் 8 லட்ச ரூபாய் ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும்.
மேலும், போடிநாயக்கன்பட்டி மந்தையில் நானும், எம்எல்ஏ, சேர்மன் ஆகியோர் அமர்ந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்று அதிகாரிகளை நாங்கள் இருக்கும் இடத்திற்கு வரச் செய்து மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றி வைப்போம்.
மேலும் படிக்க: அந்த விஷயத்தில் பிரதமருக்கு கடுகளவு கூட பொருத்தம் இல்லாதவர் உதயநிதி ; பொன்.ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்..!!
மாநிலத்திலும் எங்கள் ஆட்சி, மத்தியிலும் எங்கள் ஆட்சி இருக்கும் போது, எங்களை மீறி அதிகாரிகள் செயல்பட முடியுமா..? என்று பேசினார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.