திருச்சி : திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், கள்ள வாக்கு செலுத்தியதாகக் கூறி, பிற கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி 56 வதுவார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி தனது வாக்கினை பதிவு செய்வதற்கு பதிலாக வேட்பாளரின் பெயரில் உள்ள மற்றொரு மஞ்சுளா தேவியின் வாக்குகளை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து உடனே தவறாக வாக்கு அளித்து விட்டோம் என்று மீண்டும் தனது வாக்கினை செலுத்தியுள்ளார். இதனை அறிந்த தேமுதிக மற்றும் சுயேச்சைக் வேட்பாளர்களும் அதிகாரிகள் இடத்தில் இதுபோன்று வாக்களிப்பதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்களிக்க வந்த மஞ்சுளாதேவி தனது வாக்கினை வேட்பாளர் பதிவுத் உள்ளது தெரிந்தவுடன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து மற்ற கட்சி வேட்பாளர்களும் சுயச்சை வேட்பாளர்களும் ஒன்றிணைந்து வேட்பாளர் கள்ள ஓட்டு பதிவு செய்ததற்கு அவர் மீது உடனடியாக நடிகை எடுக்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த திமுக வேட்பாளர்கள் மற்ற கட்சியின் முதல் கும்பலாக பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்திற்கு திரண்டு வந்து அவர்களும் காவல்துறையினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் வாக்குச்சாவடி முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்துறையின் பேச்சுவார்த்தைக்கு பின்பு அனைவரும் அமைதியாக கலைந்து சென்று ஆங்காங்கே நின்றனர்.
தவறாக வாக்கு செலுத்தினாலும் மீண்டும் அவருடைய வாக்கு செலுத்தியது கள்ள ஓட்டு தான் எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையிடம் சுயேட்சை மற்றும் மற்ற கட்சி வேட்பாளர்கள் காவல்துறை மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். வேட்பாளர்களின் தர்ணாவினால் சில மணி நேரம் வாக்குச்சாவடி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.