விழுப்புரம் : வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே வாக்களிக்க வருபவர்களிடம் வலுக்கட்டாயமாக நிறுத்தி திமுகவினர் ஓட்டு கேட்பதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு திமுக அமைச்சர் பொன்முடி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியாகும். இந்த மையத்தில் திமுக முகவர் ஒருவர் திமுக சின்னம் பொருத்தப்பட்ட துண்டுப்பிரசுரம் மற்றும் பூத் ஸ்லிப் ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் வெளிப்படையாகவே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அதிமுகவினர் வாக்கு சாவடி மையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்படவே அதிமுக திமுக இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இந்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இருதரப்பினரையும் மோதலை தடுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இதனால் சிறிது நேரம் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.