திமுக – இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீட்டில் இழுபறி… பேச்சுவார்த்தை தள்ளிவைத்ததால் அப்செட்!
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் , தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை போற்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இன்று நாடாளுமன்ற தேர்தல்தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி சுப்பராயன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ” 40 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி பெறும் என்பது தமிழ்நாட்டின் கிராமப்புற, நகர்ப்புற கால நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதன் அடிப்படையில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தை மிக மிக சுமூகமாக நடைபெற்றது.
மார்ச் 3-ம் தேதிக்கு பிறகு தொகுதிப்பங்கீடு நிறைவு பெறும். 1- கட்ட பேச்சுவார்த்தையின் போது நாங்கள் பட்டியல் கொடுத்தோம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இப்போது நடைபெற்று உள்ளது” என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.