திமுக – இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீட்டில் இழுபறி… பேச்சுவார்த்தை தள்ளிவைத்ததால் அப்செட்!
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் , தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை போற்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இன்று நாடாளுமன்ற தேர்தல்தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி சுப்பராயன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ” 40 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி பெறும் என்பது தமிழ்நாட்டின் கிராமப்புற, நகர்ப்புற கால நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதன் அடிப்படையில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தை மிக மிக சுமூகமாக நடைபெற்றது.
மார்ச் 3-ம் தேதிக்கு பிறகு தொகுதிப்பங்கீடு நிறைவு பெறும். 1- கட்ட பேச்சுவார்த்தையின் போது நாங்கள் பட்டியல் கொடுத்தோம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இப்போது நடைபெற்று உள்ளது” என தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.