தமிழகம்

பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர்? வெளியான வீடியோவால் பாலியல் சீண்டல் புகார்!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி, திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா, அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பனிடம் சென்று தன் வார்டில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு தெருவிளக்கு பணி செய்ததிற்கு நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வர கேட்டுள்ளார்.

அதற்கு முனியப்பன் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா எந்த வேலை சொன்னாலும் செய்ய மாட்டியா என முனியப்பனை திட்டியுள்ளார்.

இதனையடுத்து முனியப்பன் அந்த பணியை செய்யாமல் தட்டிகழித்து ஒருமையில் பேசியதாக கூறபடுகிறது. இதனால் பாதிப்படைந்த நகரமன்ற உறுப்பினர் ரம்யா
பொறுப்பு ஆணையர் சரவணனிடம் புகார் அளிக்க சென்றபோது புகாரை எழுத்து வடிவமாக அளிக்க ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் எழுத்து வடிவமாக புகாரளிக்க ரம்யா சென்றபோது ஆணையர் இல்லாததால் மேலாளர் நெடுமாறன், வருவாய் அலுவலர் பழனி ,சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை ரம்யா புகாரளித்துள்ளார்.

அப்போது அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு முனியப்பனை அழைத்து விசாரித்துள்ளனர். பெண் கவுன்சிலரிடம் ஒருமையில் பேசிய புகாரால் உனது பதவி உயர்வு தடைபடும் என்று அறிவுறுத்திய போது நகரமன்ற தலைவி கணவர் ரவிச்சந்திரன் மன்னிப்பு கேட்டு விட்டு போ பா என முனியப்பனிடம் தெரிவித்தபோது திடீரென நகரமன்ற உறுப்பினர் ரம்யாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என அழுது முனியப்பன் தெரிவித்தவுடன் உடனடியாக முனியப்பனை அழைத்து செல்லுங்கள் என கூறி அலுவலக அறையிலிருந்து வெளியே அனுப்பினர்.

இச்சம்பவத்தில் அரசு ஊழியரை மன்னிப்பு கேட்க சொல்லியதோடு காலில் விழ வைத்ததாக திமுக அதிமுக விசிக நகர உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி விசாரனை செய்ய வேண்டுமென நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் அரசு ஊழியர் தானாகவே காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் மன்னிப்பு கேட்கும் போது ரம்யாவின் காலில் விழுந்த முனியப்பன் தனது கையை ரம்யாவின் இடுப்பில் வைத்து மன்னிப்பு கேட்டதால் பெண் கவுன்சிலரிடம் தவறான சீண்டலில் ஈடுபட்டதாக திண்டிவ்னம் டி.எஸ்.பி பிரகாஷிடம் ரம்யா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.