தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் நடந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒரு பெண் பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் முகத்தில் கைபையை வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனே அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் முகத்தில் வைக்கப்பட்டிருந்த கைபையை எடுத்து சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த பெண் தருமபுரி பழைய ரெயில்வே லைன் பகுதி கோல்டன் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரின் மகள் ஹர்ஷா (வயது23) என்பதும், இவர் ஓசூரில் உள்ள தனியார் பார்மசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்பதும், அவரை மர்ம நபர் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடலை இந்த வனப்பகுதியில் வீசி சென்றுள்ளனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் 8வது வார்டு திமுக கவுன்சிலராக புவனேஸ்வரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரை யாராவது கற்பழித்து விட்டு கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசி சென்றனரா? அல்லது காதல் விவகாரத்தில் ஹர்ஷாவை யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.