கரூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.
கரூர் மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் மாதாமாதம் நடைபெறுவது வழக்கம். அந்த வரிசையில், இன்று மாநகராட்சியின் கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன் தலைமையில், ஆணையாளர் சரவணக் குமார் முன்னணிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக கவுன்சிலர்கள் 2 பேரை கடந்த கூட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் செய்தியாளர்கள் 5 நிமிடங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தப் பிறகு வெளியேறும்படி ஒலிபெருக்கியில் மேயர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்கள் வெளியேறினர்.
வாசற்கதவு பூட்டப்பட்ட நிலையில் தாமதமாக வந்த கவுன்சிலர்கள், கவுன்சிலர்கள் ஆதரவாளர்கள், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கூட்டரங்கிற்குள் அனுமதித்தனர். கூட்டம் துவங்கி சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற நிலையில், ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கவுன்சிலர்கள் கூட்டரங்கை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வசூல் செய்வது தொடர்பாக எழுந்த வாக்குவாதத்திற்குப் பிறகு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்யப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், வெளிநடப்பு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் துணை மேயர் அறையில் முகாமிட்டுள்ளனர்.
கூட்டரங்கை விட்டு வெளியேறிய ஆணையாளர் தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.