திருவள்ளூர் : பொன்னேரியில் திமுக பிரமுகர் நகராட்சி வார்டு கவுன்சிலரின் குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் உறவினர் ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகள் காயத்ரி. இவர்கள் ஆலாடு சாலையில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்களுடைய அத்தை நந்தினி என்பவர் வீட்டினை காலி செய்த போது, அவரிடம் சாவி கேட்டதற்கு நந்தினி, நாகம்மாள், அவருடைய மகன் ஹரிகரன், வழக்கறிஞர் சுரேஷ்குமார் மற்றும் திமுக நகராட்சி வார்டு கவுன்சிலர் இளங்கோ ஆகியோர் சேர்ந்து, தன்னையும், தனது மாமா ரகுநாத், காயத்திரியின் தங்கை உள்ளிட்ட நபர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு, பெண்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய கோரி புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், தனது தாய் நந்தினியிடம், நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த ராபர்ட், வினோத், ஹரிஷ் ஆகியோர் தகராறு செய்த போது, நந்தினி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என்றும், அவரை கொலை செய்து விடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மற்றொரு தரப்பினரான குணசுந்தரி புகார் அளித்தார்.
இரு தரப்பினர் இடையே போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று இளங்கோவனுக்கு ஆதரவாக அவரது அண்ணன் தயாளன் என்பவரது மகன்கள் வினோத்குமார், திலிப் மற்றும் மற்றொரு நபர் உருட்டு கட்டை கொண்டு நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன் (48), காயத்திரி உள்ளிட்ட பலரை தாக்கிவிட்டு புதர் வழியாக தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாலமுருகனை எதிரே உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய நபர்களை தேடி வந்த நிலையில், திமுக கவுன்சிலர் இளங்கோவன் அண்ணன் தயாளன் என்பவரது மகன் வினோத்குமார், ராஜ்கிரண் ஆகிய இருவரை கைது செய்து பொன்னேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
திமுக பிரமுகர் நகராட்சி வார்டு கவுன்சிலர் குடும்பத்தின் கடைசி பிள்ளையான இளங்கோவனுக்கு வீடு உள்ளிட்ட சொத்துக்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இவருக்கு ஆதரவாக இவரது அண்ணன் தயாளன், அக்கா நந்தினி குடும்பத்தினர் வீட்டின் முதல் அண்ணனான மோகன் என்பவரது மகள் காயத்ரி, அவரிடம் வீட்டினைக் கேட்டு ஏற்பட்ட தகராறில் ஈடுபட்டதும், சமரசத்திற்காக வந்த உறவினர் ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.