தமிழகம்

சாதிவாரி பிடிக்கலைனா சமூகநீதினு பெயர் வைச்சு கணக்கெடுப்பு நடத்துங்க.. மீண்டும் சீண்டும் அன்புமணி!

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி கோரிக்கை

திண்டுக்கல்லில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்:- ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமல்ல மாநில அரசுக்கும் உரிமைகள் உள்ளது என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து எதிர்கட்சிகளும் அனைத்து தரப்பு மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழக அரசு உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நீதி என்று பேசிக்கொண்டிருக்கும் திமுக அரசு எவ்வளவு பெரிய துரோகத்தை தமிழக மக்களுக்கு செய்து வருகிறது.

பீகார் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன ஒரு சில மாநிலம் நடத்தி முடித்து விட்டன.

இந்நிலையில் தமிழகத்திற்கு மட்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை எனக் கூறுவது ஏற்க முடியாது தமிழக அரசு பொய் சொல்லி வருகிறது.

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜாதிவாரி என பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என பெயரை மாற்றி உடனடியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

இது ஒரு ஜாதி பிரச்சனை கிடையாது தமிழகத்தில் உள்ள ரெண்டரை கோடி குடும்பங்களின் நிலையை கண்டறிய வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்துடன் துல்லியமாக இரண்டு மாதங்களில் கணக்கெடுப்பை நடத்தி முடிக்கலாம்.

இப்ப எடுக்கின்ற கணக்கெடுப்பை அடுத்து வரக்கூடிய 50 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாலம்.

இந்த கணக்கெடுப்பின் மூலம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாம், நலத்திட்ட உதவிகளை அதிகப்படுத்தலாம்,

500 கோடி செலவு செய்து 3 லட்சம் அரசு ஊழியர்களை பயன்படுத்தி இரண்டு மாதத்தில் கணக்கெடுப்பு முழுமையாக முடிக்கலாம்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.