பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமித்த திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்டது தருமத்துப்பட்டி பெரிய வீதி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகுதி வழியாக இரு நூறுக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள சாலையையும், அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணறையும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முருகன் இருவரும் சேர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் மிகப் பெரிய குழியை தோண்டி தங்கள் பயன்படுத்துவதற்காக கடை கட்டி வருவதற்கு தற்போது ஏற்பாடு செய்துள்ளனர்.
எதற்காக பொதுமக்கள் பயன்படுத்தப்படும் சாலையில் கடையை கட்டுகிறீர்கள் என்று கிராம மக்கள் கேட்டதற்கு, ‘நாங்கள் அப்படித்தான் செய்வோம். யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள். யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நான் ஆளும் கட்சி. அதனால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது,’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஊர் பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.