Categories: தமிழகம்

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்த திமுக பிரமுகர்… கூடவே அண்ணாமலை : கிளம்பிய பஞ்சாயத்து!!

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளரான சிவக்குமார் என்பவர் தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இவர் வைத்துள்ள பேனர் தான் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்திருப்பதோடு பேசு பொருளாகவும் மாறியுள்ளது. நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தமைக்காக பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கோடான கோடி நன்றிகள் எனக் கூறியிருக்கிறார்.

பிரதமர் என்ற அடிப்படையில் மோடிக்கு நன்றி கூறி திமுக நிர்வாகி பேனர் வைத்ததில் தவறில்லை. ஆனால் அதே பேனரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படத்தையும் திமுக கிளைக்கழகச் செயலாளர் சிவக்குமார் போட்டிருந்தது தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

ஒரு பக்கம் ஆ.ராசா, அமைச்சர் சிவசங்கர் படங்களும் அந்த பேனரில் இடம்பெற்றுள்ளன. கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவங்களாக உள்ளவர்களை ஒரே பேனரில் போட்டு ஒரே நாளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் திமுக நிர்வாகி.

இதனிடையே அண்மையில் தான் விளம்பர பேனர்கள், பதாகைகள், போஸ்டர்களை திமுகவினர் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியிருந்தார்.

அதுமட்டுமல்ல கட்சி கட்டுப்பாட்டை மீறி இனி பேனர்களோ, போஸ்டர்களோ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சர்ச்சைக்குரிய விளம்பர பேனர் மேலும் புகைச்சலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த பேனர் படத்தை பாஜகவினர் அதிகளவில் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.