திமுக நிர்வாகி படுகொலையை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டநிலையில் ஆறுதல் சொல்ல வந்த எம்எல்ஏவை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் அருகே நேற்று மாலை திமுகவைச் சேர்ந்த ஒன்றிய பொருளாளர் மாரி பெரியண்ணா மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு வேடசந்தூர் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை எடுத்து பிரயோத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இந்நிலையில் இன்று காலை முதல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உறவினர்கள் குவிந்தனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட உறவினர்கள் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பியும் வருகின்றனர்.
மேலும் படிக்க: அமைச்சர் வீட்டில் புகுந்த அமலாக்கத்துறை.. ஒரே நேரத்தில் 15 இடங்களில் சோதனை.. பரபரப்பு!
இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயிரிழந்த திமுக பிரமுகர் மாரி பெரியண்ணாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜனிடம் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பிய போராட்டக்காரர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காரில் ஏறி சென்றார் சட்டமன்ற உறுப்பினர்.
தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையில் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருந்து வந்த நிலையில் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தை பின் கலைந்து சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.