எந்த ரெய்டுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று பம்மலில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அப்பகுதியின் செயலாளரும், மண்டல குழு தலைவருமான வே. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோஅன்பரசன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது, அவர் பேசியதாவது :- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி ரைடுகள் எல்லாம் திமுக கலைஞர் காலத்திலேயே சந்தித்துள்ளது. எந்த ரெய்டுகளுக்கும் அஞ்ச மாட்டோம். ராஜாஜி காலத்தில் எங்களுக்கு ரெய்டு ஆகிறது. கலைஞர் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளை நிர்வாணமாக்கி சோதனை செய்தார்கள். வேறு யாராக இருந்தாலும் மிகவும் பதறி இருப்பார்கள்.
ஆனால், கலைஞர் வாங்க முரசொலி அலுவலகத்திற்கு செல்லலாம் என அதை மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டு முரசொலியில் எழுதினாரே தவிர, அதை கண்டு கலங்கவில்லை. கலைஞர் கலங்கினால் கட்சியில் உள்ள அனைத்து தொண்டனும் சோர்வடைந்து விடுவான் என எண்ணி அவர் கலங்கவில்லை, என்றார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.