உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு திமுக பிரமுகர் செக்ஸ் டார்ச்சர் : நான் திமுக காரன்.. உன்னால ஒன்னும் பண்ண முடியாது என மிரட்டல்!!!
கணவனை இழந்த பெண்ணிற்கு செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக பிரமுகர் மீது ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் ரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி மாற்றுத்திறனாளி மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய கணவர் இறந்து 11 வருடங்கள் ஆன நிலையில், இவர் கூலி வேலை செய்து, தன் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியான காந்தி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான பிரபு என்ற இளைஞரிடம் ரோஜா, தனது மாற்றுத்திறனாளி பையனுக்கு, ஏதாவது மிதிவண்டி அல்லது ஏதாவது உதவி செய்து தரும்படி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில், சரோஜாவின் செல்போன் நம்பரை பெற்றுக் கொண்ட பிரபு, அவருக்கு தொடர்ந்து செல்போனில் அடிக்கடி செக்ஸ் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
அதன்பின், ரோஜா அவரது செல்போன் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரபு, கடந்த சில தினங்களாக வீடியோ காலில் தொடர்பு கொள்வதும், பேசுவதும், வாட்ஸ் ஆப்பில் ஆபாச படங்களை அனுப்புவதும், ஆபாசமான வார்த்தைகளில் பேசுவதும், அவரது ஆபாச புகைப்படங்களை அனுப்புவதும் என தொடர்ந்து அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
மேலும், ‘நான் திமுக பிரமுகர் என்றும், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், அதனால் நீ என் ஆசைக்கு இனங்கும் படியும், அப்படி இனங்காவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்றும், உன் பிள்ளைகள் அனாதையாகிவிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன ரோஜா ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டியும், தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தரக்கூடிய பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.