தமிழகம்

கடனை திருப்பி கேட்ட வங்கி.. விவசாய கடனை செலுத்த முடியாத திமுக நிர்வாகி விபரீத முடிவு!

திருவள்ளூர் மாவட்டம் வேலூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முத்துராஜ். 60 வயதான இவருக்கு சுசீலா என்ற மனைவியும், நான்கு மகன்கள் ஒரு பெண் பிள்ளை இருக்கின்றனர்.

முத்துராஜ் திமுகவின் வேலூர் ஊராட்சியில் கிளை கழக செயலாளராக இருக்கிறார். மேலும் முத்துராஜ் ஒரு விவசாயி சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் இருந்தும் அதில் விவசாயம் செய்ய இயலாது. காரணம் தண்ணீர் வசதி இல்லை.

இதையும் படியுங்க: வரும் 2026 தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் தமிழக பட்ஜெட் : ஹெச் ராஜா கிண்டல்!

இந்த நிலையில் பொன்னேரிக்கு அருகே உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் ஆறு ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து அதில் விவசாயம் செய்து வந்தார். மேலும் விவசாயத்திற்காக வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது.

அது மட்டுமல்லாது குத்தகை எடுத்த நிலத்தில் கடந்த முறை நெற்பயிர் பயிரிட்டுள்ளார். அது மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டடுள்ளது.

தற்பொழுது அதில் தர்பூசணி பழத்தை பயிரிட்டு வளர்த்து வரும் நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளார். அது மட்டுமல்லாது வங்கியை சேர்ந்தவர்கள் இவரை தொந்தரவு செய்ததால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் நேற்று இரவு 12 மணி அளவில் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அதை பார்த்த அவரின் மனைவி சுசிலா மற்றும் மகன்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முத்துராஜன் உடலை கைப்பற்றினர்.

இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிந்ததால் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் வாங்கிய விவசாய கடனுக்காக விவசாயி தற்கொலை செய்து கொண்டது கடந்த காலங்களில் கொஞ்சம் குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் விவசாயி கடன் தொல்லைக்காக தற்கொலை செய்து கொண்டது இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

4 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

5 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

5 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

5 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

5 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

6 hours ago

This website uses cookies.