கலைஞர் ஆட்சியில் ரேஷன் கடையில் மூட்டை மூட்டையாகவும், பெட்டி பெட்டியாக அரிசி, பருப்புகளை தூக்குவோம் என்று திமுக நிர்வாகி பகிரங்க கூறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா டிடி 487 திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலையில் சேல்ஸ் மேலாளராக பணியாற்றுபவர் மேனகா (32). இந்த நுகர்வோர் பண்டகால சாலையில் மொத்தம் 1233 ரேஷன் கார்டுகள் உள்ளது. சந்தைப்பேட்டை, நேருஜி நகர், வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு பொருள்களை வாங்குவது வழக்கம்.
மேனகா நேற்று தனது பணியை செய்து கொண்டிருந்தபோது, திமுக அவைத்தலைவர் அமீர் பாட்ஷா என்பவர் மேனகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“உன்னால் முடிந்ததை பார். தற்போது இருப்பவர் சின்ன தலைவர். நாங்கள் பெரிய தலைவர் கலைஞர் இருந்தபோது, மூட்டை மூட்டையாகவும், பெட்டி பெட்டியாக அரிசி, பருப்புகளை, அப்போது இருந்த நகர தலைவர் அன்வரை வைத்து தூக்கிச் சென்றோம். நானும் பெட்டி பெட்டியாக வீட்டுக்கு தூக்கிச் சென்றேன், என்று பகிரங்க வாக்குமூலம் அளித்தார்.
ரெண்டு பாக்கெட் எண்ணெய் இல்லை என்று சொல்கிறாய். நீ என்ன மயிரை புடுங்குற சேல்ஸ்மேன்,” என்று அரசு அதிகாரியை ஒருமையில் பேசியும் எச்சரித்தார்.
பெண் விற்பனையாளரை பார்த்து நீ ஒன்னாம் நம்பர் நாடகம், மனோகர் இரண்டாம் நம்பர் நாடகம் என்றும், என்னிடம் விளையாட்டுத்தனமாக விளையாட வேண்டாம், விபரீதம் ஆகிவிடும் என்றும் எச்சரித்து பேசினார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் பயந்து பயந்து வேலை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.