திமுக நிர்வாகி ஒருவர் அப்பா மகனை தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20ம் தேதி ஞாயிறன்று இரவு, திருப்பூர் சீனிவாசா திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் மதுபோதையில் திமுக நிர்வாகியான அருண்மொழி நின்றிருக்கிறார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் இவரை உரசுவது போல சென்றதால், ஆத்திரமடைந்த அருண்மொழி காரை நிறுத்தி அதில் இருந்த அபிபுல்லா அவரது மகன் சபி ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்த அருண்மொழி அபிபுல்லா மற்றும் அவரது மகனை துரத்தி துரத்தி தாக்கியதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
4 நாட்கள் கழித்து தற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மதுபோதையில் அப்பா மகனை திமுக நிர்வாகி துரத்தி அடித்த போது அருகில் டராபிக் போலீசார் ஒருவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அபிபுல்லா புகார் அளித்தார்.
அதனடிப்படையில் அருண்மொழியை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்த பின் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து மக்களுக்கு எதிரான சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.