திமுக நிர்வாகி ஒருவர் அப்பா மகனை தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20ம் தேதி ஞாயிறன்று இரவு, திருப்பூர் சீனிவாசா திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் மதுபோதையில் திமுக நிர்வாகியான அருண்மொழி நின்றிருக்கிறார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் இவரை உரசுவது போல சென்றதால், ஆத்திரமடைந்த அருண்மொழி காரை நிறுத்தி அதில் இருந்த அபிபுல்லா அவரது மகன் சபி ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்த அருண்மொழி அபிபுல்லா மற்றும் அவரது மகனை துரத்தி துரத்தி தாக்கியதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
4 நாட்கள் கழித்து தற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மதுபோதையில் அப்பா மகனை திமுக நிர்வாகி துரத்தி அடித்த போது அருகில் டராபிக் போலீசார் ஒருவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அபிபுல்லா புகார் அளித்தார்.
அதனடிப்படையில் அருண்மொழியை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்த பின் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து மக்களுக்கு எதிரான சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.