தேனி : அண்ணா நினைவு தினத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க கூட்டம் இல்லாததால், அவ்வழியே சென்ற பொதுமக்களிடம் கூட்டத்திற்கு வந்தால் பரிசு டோக்கன் கிடைக்கும் என கூறி திமுகவினர் கூட்டம் சேர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் உட்பட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் கூட்டம் கூட்டவேண்டும் என்பதற்காக பொதுமக்களிடம் கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் பரிசு கிடைக்கும் என பெண்கள் உட்பட பலரிடம் திமுகவினர் சொல்ல, ஏதோ பெரிதாக இருக்கும் என நம்பி வந்த அனைவருக்கும் டீ மற்றும் வடைகளுக்கான டோக்கன் கொடுத்தனர்.
பெரிதாக ஏதோ பரிசு பொருள் கிடைக்கும் என நம்பி வந்த அனைவரிடமும், அந்தக் கடையில் டீ குடிக்க டோக்கன் வாங்கி செல்லுங்கள் என்றனர் திமுகவினர். முணுமுணுத்த படி, ‘இந்த டீ வடைக்காகவா வந்தோம்’, என்றவாறே வேடிக்கை பார்க்க வந்த பெண்கள் கலைந்து சென்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.