தமிழகம்

சாதியை காரணம் காட்டி காதலர்களை பிரித்து வைத்த திமுக நிர்வாகிகள்.. பட்டியலின இளம்பெண் விபரீத முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் இடையா்பாக்கம் அடுத்த கோட்டூர் ஊராட்சியை சேர்ந்தவர் செந்தில்குமார் . இவருடைய மனைவி ஜோதிலட்சுமி , மகள் அனிஷா. இவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.

இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வந்த அனிஷா இடையில் கல்லூரிக்கு செல்லாமல் நின்று விட்டார்.

ஏகனாபுரம் அருகே உள்ள கண்ணன் தாங்கல் பகுதியை சேர்ந்த, மாற்று சமூகத்தை சேர்ந்த சஞ்சய் கண்ணன் அனுஷா ஆகிய இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்தள்ளனர்.

சஞ்சய் கண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அனிஷாவின் வீட்டுக்கு சென்ற சஞ்சய் கண்ணன் உங்கள் மகளை திருமணம் செய்து கொண்டு நான் இங்கேயே தங்கி விடுகின்றேன் எனக் கூறியுள்ளார்.

அனுஷாவின் பெற்றோர்களும் உறவினர்களும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதித்தனர். இந்நிலையில் சஞ்சய் கண்ணனின் பெற்றோர்கள் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகி, விசுவநாதனிடம் சென்று எங்களுடைய மகனை மீட்டுக் கொடுங்கள் என முறையிட்டுள்ளனர்.

கண்ணன் தாங்கல் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான விஸ்வநாதன் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகையன் ஆகியோர் செந்தில்குமார் வீட்டுக்கு சென்று, இரண்டு வாரம் அவகாசம் கொடுங்கள் இவர்களுக்கு திருமணத்தை செய்து வைக்கின்றோம் என நயவஞ்சகமாக கூறி சஞ்சய் கண்ணனை விசுவநாதன் அழைத்து சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.

சஞ்சய் கண்ணன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் என தன்னுடைய உறவினர் மூலமாக, கேள்விப்பட்ட அனுஷா கடந்த ஒன்பதாம் தேதி அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனிஷா சஞ்சய் கண்ணன் ஆகியோர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி நாடகமாடிய திமுக கட்சியை சேர்ந்த கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகையன் மற்றும் கண்ணன் தாங்கல் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விசுவநாதன் ஆகிய இருவர் தான் என்னுடைய மகள் சாவுக்கு காரணம் எனக்கூறி நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் , பிரேதபரிசோதனைக்கும் அனுமதிக்க மாட்டோம் என அனிஷாவின் பெற்றோர்களும் உறவினர்களும் கடந்த இரண்டு நாட்களாக போராடி வருகின்றனர்.

முதல் குற்ற அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் எஸ்சிஎஸ்டி ஆக்டில் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை இடையப்பாக்கம் கோட்டூர் ஜங்ஷனில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் தாமோதரன் உள்ளிட்ட காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.