திமுக குடும்ப கம்பெனி கட்சி கொள்ளையடித்து ஊழல் செய்கிறது.. மக்கள் பாடம் புகட்டுவார்கள் : இபிஎஸ் சூளுரை!!
தருமபுரியை சேர்ந்த அதிமுக நிர்வாகியான எஸ். ஆர்.வெற்றிவேல் இல்ல திருமண விழா தனியார் திருமண மண்படம் ஒன்றில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, பேசிய போது, மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு, பல்லாண்டு காலம் வாழ வேண்டும், ஜாதிக்கும், மதங்களுக்கும் அப்பார்பட்ட கட்சி தான் அதிமுக, பாஜக கட்சிக்கும் அதிமுகவிற்கும் இடையே மறைமுகமான உறவு இருப்பதை போல கூறுகின்றனர், பாஜக.. அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது.
ஆனால் திமுக வினரோ கூட்டணி இருப்பது போல பிதற்றுகின்றனர், விவசாயிகள் நிறைந்த மண் தருமபுரி மண், தருமபுரி மாவட்டத்திற்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. திட்டத்தை நிறைவேற்றாதவர்கள் திமுகவினர்..
விவசாயத்திற்கு நீர் ஆதாரம் முக்கியம், தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவருவது உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. ஆனால் அந்த திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது..
திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வந்தது.. கர்ப்பணி பெண்களுக்கான திட்டம்.. அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம், அம்மா கிளினிக் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தது.. அதிமுக.இந்த திட்டங்களை மூடி முடக்கியவர்கள் தான் திமுகவினர்.
முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நீட்டை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்… நீட்டை கொண்டு வந்தது.. காங்கிரசும்.. திமுக வும் தான்.
ஆனால் நீட்டை எதிர்ப்பவர்களும்.. இதே காங்கிரசும்.. திமுகவு தான்.. என்ன வேடிக்கை பாருங்கள். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தது.. அதிமுக.
ஏழை எளியோருக்கான கட்சி அதிமுக.. மக்கள் ஏற்றம் பெறவேண்டும், ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும். பொங்கல் பண்டிகயைினை மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் தொகுப்பை கொண்டு வந்தது அதிமுக.. ஆனால் மக்கள் பயன்படுத்த முடியாதபடி பொருட்களை கொடுத்து ஊழல் செய்தவர்கள் திமுக.
எங்கு பார்த்தாலும், போதை பொருட்கள் சாதாரமாக புழுங்குகிறது, கொலை, கொள்ளை நடக்கிறது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது.
திமுகவினர் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றபடவில்லை, மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் தரபோவதாக கூறினார்கள், ஆனால் தகுதியானவர்களுக்கு ஆயிரம் என்றார்கள்
அறவழியல் போராடுகின்ற விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது, இதை வன்மையாக கண்டிக்கிறேன், அதிமுக ஆட்சி காலத்தில் எத்தனையோ போரட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
திமுக அமைச்சர் ஒருவர் ஆடியோ ஒன்றினை வெளியி்ட்டிருந்தார், அதில் 30 ஆயிரம் கோடி ரூபாயை உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் வைத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருப்பதாக பேசியிருந்தார்.
இப்படி தான் திமுக குடும்ப கம்பெனி கட்சி கொள்ளையடித்து, ஊழல் செய்து கொண்டிருக்கிறது, அதிமுக அப்படி அல்ல இன்றைக்கு யார் வேண்டுமானாலும் முதலமைச்சராக வரலாம், அனைவருக்குமான கட்சி தான அதிமுக
மக்கள் இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.. வரவிருக்கின்ற நாடாளுமனற தேர்தலில் திமுகவினருக்கு மக்கள்.. சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
This website uses cookies.