திண்டுக்கல் : கூட்டுறவுத் துறை அமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த திமுக கொடியால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர் .
இரண்டு அமைச்சர்களையும் வரவேற்பதற்காக திமுகவினர் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன்களில் திமுக கட்சி கொடியை வைத்திருந்தனர்.
இதற்கிடையே பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த அன்வர் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திமுக கொடி சாய்ந்ததில் அன்வர் வாகனத்தில் மோதி இருவரும் கீழே விழுந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அன்வரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அரசு நிகழ்ச்சிக்காக அமைச்சர்களை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த திமுக கொடியால் விபத்து ஏற்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.