விருதுநகர் ; அருப்புக்கோட்டை அருகே அமைச்சர்களை வரவேற்பதற்காக திருச்சுழி சாலையில் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் விவசாயி ஒருவர் பலத்த காயமடைந்தார்.
அருப்புக்கோட்டை அருகே அகரத்துப்பட்டியில் நடந்த திமுக நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அவர்களை வரவேற்கும் விதமாக, திருச்சுழி சாலையில் திமுக கொடிக்கம்பங்களும், தோரணங்களும் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், செவல்பட்டி கார்த்திகேயன் நகரைச் சேர்ந்த சண்முகவேல் என்ற விவசாயி அந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பார்க்காத வகையில், சாலையின் ஓரம் நடவு செய்யப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது. இதில், வாகனத்தில் சென்று கொண்டிருந்த சண்முகவேலின் முகத்திலேயே பலமாக விழுந்துள்ளது.
இதில், அவரது வாய் கிழிந்து 5 பற்கள் உடைந்தன. இதனால், ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சண்முகவேலின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.