Categories: தமிழகம்

கொதுகை ஏரியில் விதிகளை மீறி மண் எடுக்கும் ஆளும் கட்சியினர்… லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கொதுகை ஏரியில் விதிகளை மீறி அதிக ஆழத்துக்கு மண் எடுக்கப்படுகிறது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மண் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் இடத்திடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

முசரவாக்கம் கொதுகை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மேலும் ஏரியில் உள்ள மண்ணை அப்புறத்தப்படுத்தி தூர்வார வேண்டும், கரையை பலப்படுத்தி தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் நீர்வள ஆதாரத்துறையும் இதற்கான நடவடிக்கையை எடுத்தது. அதனடிப்படையில் இந்த ஏரியில் 250 மீட்டர் நீளத்துக்கும், 126 மீட்டர் அகலதுக்கும், 3 அடி ஆழத்துக்கு சுமார் 5000 லோடு மண் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஏரியில் 8 க்கும் மேற்பட்ட ராட்சத பொக்லைன் இயந்திரங்களை வைத்துக் கொண்டு விதிகளை மீறி பல அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரே மாதத்தில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட லோடுகள் எடுத்து தனியார் நிறுவனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது. ஏரியில் அதிக அளவு ஆழத்துக்கு மண் எடுப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் புகார்களை கண்டுகொள்ளாததாலும், நூற்றுக்கணக்கான லாரிகள் இந்த ஏரியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு தினம்தோறும் அந்த கிராமத்தின் வழியாக அதிக வேகத்தில் செல்வதாலும், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறி, அந்த வழியாக செல்லும் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினம்தோறும் 500 முதல் 600 வண்டிகள் எங்கள் கிராமத்து வழியே வண்டல் மண் எடுத்து செல்வதால் சாலைகள் பழுதடைந்து உள்ளது. விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்றது, மேலும் அளவுக்கு அதிகமாக ஏரியில் மண் எடுப்பதால் மழைக்காலத்தில் கால்நடைகள் மற்றும் மனிதர்கள் அந்த பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

எனவே அளவுக்கு அதிகமாக மண் எடுத்து விற்பனை செய்த திமுகவை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடம் பணத்தை மீட்டு அரசாங்க கருவூலத்தில் சேர்க்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. இந்தப் பகுதியில் லாரிகள் அதிகம் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதுடன், ஏரியில் விதிகளை மீறி மண் எடுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, உத்தரவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மண் எடுக்க கூடாது என்பதை ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்துவோம் என்றனர். மாவட்ட நிர்வாகமும் ஒப்பந்ததாரரை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளது, என்றனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

24 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

1 day ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

1 day ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 day ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

1 day ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

1 day ago

This website uses cookies.