தென்காசி – சிவகிரியில் 600 கிலோ குட்கா பொருளை கடத்திய திமுக ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் கைது
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் புழக்கமும், கடத்தலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தென்காசியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீஸ் கைது செய்தனர்.
மேலும் படிக்க: சிங்காரச் சென்னை திட்டத்தில் ரூ.500 கோடி முறைகேடு.. யானை பசிக்கு சோள பொறியா..? ஜெயக்குமார் ஆவேசம்..!!
மாவட்ட எல்லையான சிவகிரியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் வந்த காரை மடக்கி நடத்தப்பட்ட பரிசோதனையில், 600 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, காரில் வந்தவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர், தென்காசி மாவட்ட ஊராட்சிமன்ற தலைவரான திமுகவை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் கணவர் சந்திர போஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சந்திர போஸ் மற்றும் கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், குட்கா போதைப்பொருளை கடத்திய திமுக நிர்வாகி சந்திர போஸை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.