செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு பட்டப்பகலில் திமுக பொதுக்குழு உறுப்பினரின் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி முருகன் -தமிழ்செல்வி. முருகன் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (25) என்பவர் செங்கோட்டை நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், ராஜேஷ் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் வந்தபோது, அவரை அலுவலக வளாகத்தில் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் பற்றி தகவலறிந்த உறவினர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சங் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.