புதுக்கோட்டையில் அமைச்சர் வராமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என்று திமுக மாவட்ட செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படச் செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்தது. கோவில் காளை அவிழ்க்கப்பட்டு வீரர்கள் உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழாவிற்கு முன்னாள் அமைச்சரும், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் பங்கேற்று இருந்தார். ஆனால், திமுக அமைச்சர் வந்த பிறகு தான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று கூறி திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், விழாக்கமிட்டியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தடைபட்டது. இதன் காரணமாக, மாடுபிடி வீரர்கள் களத்தில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டனர். திமுக நிர்வாகியின் இந்த செயல் அங்கிருந்தவர்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.