திமுக பிரமுகரின் இடையூறினால் மாற்றுத்திறனாளி விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜதானி கோட்டையைச் சேர்ந்த துரைப்பாண்டி. இவருக்கு இதே பகுதியில் ஒரு ஏக்கர் 12 சென்ட் நிலம் உள்ளது.
தொடர்ந்து பல வருடங்களாக நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த திமுக கட்சியில் உள்ள திருமூர்த்தி என்பவர், தாங்கள் பயன்படுத்தி வந்த சாலையை மறித்து விவசாய நிலத்திற்கு செல்ல விடாமல் தடுப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது வரை விவசாய நிலத்திற்கு செல்ல முடியவில்லை எனக் கூறி மாற்றுத்திறனாளி துரைப்பாண்டி வீல் சேருடன் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி மாவட்ட ஆட்சியுடன் புகார் மனுவை வழங்குவதற்கு அழைத்துச் சென்றனர்
மாற்றுத்திறனாளி வீல் சேருடான் மண்ணெண்ணெய் ஊற்றிய சம்பவம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.