விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம் : சினிமாத்துறையே முடங்கியதற் காரணம் ரெட் ஜெயண்ட்.. முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் கொடி காத்த குமரனின் 120வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமை அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கடம்பூர் ராஜூ, விஜய்யை பார்த்து திராவிட முன்னேற்ற கழகம் பயப்படுகிறது. சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் அரசு ஏற்றத்தாழ்வுகளை பார்க்க கூடாது.
கடந்த அதிமுக ஆட்சியில் பண்டிகை காலங்களில், முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சமும் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம். ஆனால் தற்போது குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திரைப்படங்கள் பாரபட்சமில்லாமல் திரையிடப்பட்டது. ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படாத சூழ்நிலையில் தான் உள்ளது.
திரைத்துறையே முடங்கி இருப்பதாக எங்களைச் சந்திக்கும் சினிமா துறையினர் கூறுகின்றனர். இதற்குக் காரணம் ரெட் ஜெயன்ட் என்ற நிறுவனத்தின் தனி ஆதிக்கம் தான் எனத் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
This website uses cookies.