காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே திமுக பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர் சேகர்(52). கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு புரட்சிபாரதம் கட்சியின் காஞ்சிபுரம் நகர தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தார். தற்போது திமுக கட்சியின் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவரது மனைவி சைலஜா கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் சேகர் தனது இருசக்கர வாகனத்தில் கோனேரி குப்பத்தில் உள்ள தலையாரி தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரிடம் பேசுவது போல் நெருங்கி திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சேகரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக கோனேரிக்குப்பம் பகுதியில் மிகுந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
This website uses cookies.