முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் சாதிய அடக்குமுறை பற்றி பேசிய வசனங்களை 30 அடி போஸ்டராக ஒட்டி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம் போன்ற பகுதிகளில், கலைஞர் சாதிய அடக்குமுறை பற்றி பேசிய வசனமான “கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்,” என்ற வரிகளை போஸ்டராக ஒட்டியுள்ளனர்.
ரயில் நிலையம், உக்கடம், போன்ற பகுதிகளில் இந்த போஸ்டரை சுமார் 30 அடி நீளத்திற்கு ஒட்டியுள்ளனர். பெரிய கடை வீதி பகுதி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் CMS மசூது, வர்த்தக அணி துணை அமைப்பாளர் அபுதாஹிர் ஆகியோர் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். இந்த 30 அடி நீள போஸ்டரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.