குத்தகைக்கு விட்ட கடையை காலி செய்ய மறுத்த உடன்பிறப்புகளால் தீக்குளிக்க முயன்ற கடை உரிமையாளரின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடை வீதியில் அஸ்கர் அலி என்பவரின் தந்தை, திமுக பிரமுகர் சித்திக் பாஷாவின் தந்தைக்கு கடையை குத்தகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் அஸ்கர் அலி குத்தகை பணத்தை திருப்பி தந்து கடையை காலி செய்ய சொல்லியுள்ளார். ஆனால் திமுக பிரமுகர் அந்த கடையை காலி செய்ய மறுத்ததாக தெரியவருகிறது.
அஸ்கர் அலி அளித்த புகார் மனுவின் மீதான் உத்தரவின் அடிப்படையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் கடைக்கு சீல் வைக்க வந்துள்ளனர். அவர்களை சீல் வைக்க விடாமல் சித்திக் பாஷா தடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அஸ்கர் அலி திடீரென தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றுள்ளார். அதனை கண்ட காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றியுள்ளனர்.
வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் கடைக்கு சீல் வைத்துவிட்டு திமுகவினரின் அழுத்தம் காரணமாக சாவியை தன்னிடம் ஒப்படைக்காமல் சென்றுள்ளனர் என அஸ்கர் அலி குற்றம்சாட்டியுள்ளார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.