பொய்யான வழக்கு பதிந்து திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
மதுரையை சேர்ந்த காளிமுத்து என்கிற வெள்ளகாளியை என்கவுண்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட அவரது தாய், சகோதரி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட வெள்ளைகாளி தாயார், ராஜம்மாள் கூறுகையில், அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கோட்டத் தலைவரும் தற்போது மண்டல செயலாளராக உள்ள திமுகவை சேர்ந்த குருசாமி என்பவர் தொடர்ந்து சில உள் நோக்கத்துடன் காளிமுத்து என்கிற வெள்ளைக்காளி மீதுபொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் அவருக்காக வாதாட வரும் வழக்கறிஞர்களையும் மிரட்டுவதாகவும் தற்போது இரு வழக்கறிஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், அந்த வழக்கறிஞர்கள் தங்கள் பையனை என்கவுண்டரில் சுட்டு தள்ள உள்ளதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு கோரி உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது அவர்கள் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் உட்பட பலர் இருந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.