புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் திமுக வடக்கு மாவட்ட பூத்கமிட்டி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திமுக முதன்மை கழகச் செயலாளரும் அமைச்சருமான கே என் நேரு ரகுபதி மெய்ய நாதன் ஆகியோரை புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளர்கள் வட்டச் செயலாளர்கள் ஆகியோர் வருகை புரிந்தனா.
இதையும் படியுங்க: அரசு கொடுத்த வேலை 80 கிமீ தூரம்.. தண்ணி இல்லாத காட்டுக்குள் வீடு : அஜித் குமார் சகோதரர் அதிருப்தி!
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை திமுக மாநகர பொறுப்பாளர் ராஜேஷ் என்பவரை மாற்றக்கோரி பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பி முற்றுகையிட்டு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
மேலும் திமுக மாநகர பொறுப்பாளரை மாற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அப்பொழுது வந்த அமைச்சர்கள், புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்களை அமைதிப்படுத்தி அவர்களது கோரிக்கையை திமுக தலைமைக்கு எடுத்துச் சொல்வதாக கூறினர்.
ஆனாலும் அதனை ஏற்க மறுத்த திமுக நிர்வாகிகள் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் ஆக இருந்த செந்தில் என்பவர் சமீபத்தில் மரணமடைந்ததை எடுத்து திமுக தலைமை ராஜேஷ் என்பவரை மாநகர பொறுப்பாளராக அறிவித்தது.
அவரை அறிவித்ததில் இருந்து புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளர்கள் வட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் ஆகியோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதற்கு ஒரு பகுதியாக தான் இன்று பூத் கமிட்டி கலந்தாய் கூட்டத்திற்கு வந்த அமைச்சர்களை வழிமறித்து திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வலம் வரும் நிலையில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே…
அனிருத் இசை நிகழ்ச்சியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக தகவல் அனிருத்தின் இசை…
அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோவை…
பண மோசடி வழக்கில் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் சௌபின் சாஹிரை போலீஸார் கைது செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மரண ஹிட்…
போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக ஐடி…
தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.…
This website uses cookies.