கொலை முயற்சி வழக்கில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 2011ம் ஆண்டு திமுகவினர் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். அப்பொழுது, திமுக எம்எல்ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஆறுமுகநேரி நகர, திமுக செயலாளர் சுரேஷ் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கடந்த 2011 மார்ச் மற்றும் மே மாதங்களில் திமுக நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் பெட்ரோல் குண்டு வீச்சி கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. இந்தக் கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அமைச்சர் அனிதாகிருஷ்ணன் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று ஆஜரான நிலையில் இன்று இரண்டாம் நாளாக இன்றும் அவரிடம் விசாரணை நடைபெறுவதை முன்னிட்டு இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.
இவ் வழக்கு தொடர்பாக அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்த கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தற்போது பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரும் இன்று இவ்வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகினர், இந்த வழக்கினை விசாரணை செய்த மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி வரும் 23.1.2023-அன்று இந்த வழக்கினை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.