தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அமைச்சர் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan12 June 2025, 6:54 pm
திண்டுக்கல், ஆத்தூர் தாலுகாவில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியது குறித்த கேள்விக்கு, அது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். கண்ணு தெரிந்து கொண்டே தண்ணியில்லா பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள். தண்ணி இருந்தால் குதிக்கலாம் தண்ணி இல்லாமல் எப்படி குதிக்க முடியும்.
இதையும் படியுங்க: திமுக அரசுக்கு 2 நாள்தான் கெடு.. தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை எச்சரிக்கை… !
இந்தியாவில் தலைசிறந்த அரசாக தலைசிறந்த மாநிலமாகதலைசிறந்த முதலமைச்சராக தமிழ்நாட்டில் திட்டங்கள் வளர்ச்சியிலிருந்து எல்லோரிடத்திலும் முதன்மையான அரசாங்கம் எல்லாத் துறைகளும் உயர்ந்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100க்கு 100% வந்துள்ளது என்றால் படிப்பதற்கு ஆர்வமாக வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் போகாத பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்.

கல்லூரிக்கு சென்றால் பணம், பள்ளிகளில் காலை உணவு மதிய உணவு உள்ளது. படிப்பதற்கு இலவசம், கல்லூரி வரை இலவசம் எல்லாமே இலவசம் ஆனால் இதனை இலவசம் என கூற மாட்டேன். கட்டணமில்லா கல்வி பெறுவதற்கு அரசு முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கொடி தூக்கவில்லை, மிரட்டவில்லை அவர்களின் உரிமையை கேட்கின்றனர். உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சி திமுக. யார் வேண்டுமானாலும் கேட்கலாம். முதலமைச்சர் அனைத்தையும் பரிசீலனை செய்வார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது. வீடியோ வரக்கூடாது ரைடு வரக்கூடாது இஃன்கம் டேக்ஸ் வரக்கூடாது. சூதானமாக இருக்க வேண்டும்.
கூட்டணிகள் அதிகப்படியான சீட்டுகள் கேட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்வார். எந்தக் கூட்டணியும் நம்மை விட்டு போகாது.” என தெரிவித்தார்.