Categories: தமிழகம்

பாஜகவை ஏற்கக்கூடியவர்கள் தமிழகத்தில் இல்லாததால் அந்த வேலையை ஆளுநர் பார்த்து வருகிறார் : அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திடீரென செய்தியாளரை சந்தித்து பேட்டி பேட்டியளித்தார்

அப்பொழுது அவர் பேசையில் தமிழக முதலமைச்சர் இரண்டு ஆண்டுகளில் ஆரம்ப கல்வி வளர்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.

உயர்கல்வி துறையில் படிக்க மாணவர்கள் திறனை வளர்க்க நான் முதல்வன் திட்டத்தினை கொண்டு வந்திருக்கிறார். நான் முதல்வர் திட்டத்தினை சிங்கப்பூர் கல்வி அமைச்சரே பாராட்டி உள்ளார். தமிழகத்தில் கல்வி தரத்தில் வளர வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார்.

பேப்பரையாவது கவர்னர் படிக்க வேண்டும் அரசியல் வாதி போன்றும் எதிர்கட்சி போன்று பேசுவது வருந்ததக்கது எதிர்கட்சி போன்று செயல்படுகிறார்.

ஆளுநர் ஊட்டிக்கு துனை வேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதற்காக சென்றிருக்கிறார். அதற்கு அவர் தனியாக சென்றிருக்கலாம் என்றும் தமிழ் நாட்டில் எப்படி கல்வி வளர்ச்சி தரம் குறைந்து விட்டது என்று கூறுகிறார் அவர் எத்தனை கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்திருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழகத்தை பொறுத்த வரை இரு மொழிக்கொள்கை தான் ஆளுநர் இருந்த மாநிலத்தில் தாய்மொழியையே சரியாக படிக்காதவர்கள் உள்ளனர்.

படிப்பாடியாக எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம் பீகார் மாநிலத்தில் எப்படி கல்வி தரம் உள்ளது என்பதை அவர் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை அதனால் தான் ஆளுநர் மூலமாக கொண்டு வருவதற்கு முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்…

தொழிற்சாலை பெருக வேண்டும் என்பதால் தான் வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டு இங்குள்ள சூழல் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அவர் பயணம் மேற்கொண்டார் இதையெல்லாம் பாராட்டவில்லை என்றாலும் இதை அரசியல் செய்வார் என எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

ஊட்டியில் குளிர் இருப்பதால் அவர் அங்கு சென்றுள்ளார் அவர் சென்ற பிறகு சென்னையில் மழை பெய்துள்ளது என கிண்டலாகவும் கேலியாகவும் சிரித்தபடி பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.