பழனி மலைக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, விழா ஏற்பாடுகளை தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா வருகிற 27ம்தேதி நடைபெற உள்ளது.
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சென்று பழனி கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
படிப்பாதை வழியாக மலை மீது சென்ற அமைச்சர் சேகர்பாபு படிப்பாதையில் உள்ள கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மலை மீது அமைந்துள்ள ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரம் திருப்பணிகளையும், குடமுழுக்கு ஏற்பாடுகளையும் அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் குடமுழுக்கு விழாவிற்காக மலை மீது அமைக்கப்பட்டுள்ள யாகசாலைகள் மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.